how are drones used in agriculture
Agriculture Drones Part 2
போன பகுதியில் விவசாயத்தில் ட்ரோன் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி பார்த்தோம் இந்த பகுதியில் விவசாயத்தில் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பதை பற்றிப்பார்ப்போம் .
ஒரு புதிய டெக்னாலஜியை நோக்கி நாம் போகிறோம் என்றால் நேரம் மற்றும் ஆட்கள் பற்றாக்குறைதான் காரணமாக இருக்கும் . அடுத்த பத்து ஆண்டுகளில் இது இன்னும் அதிகரிக்கும் அப்பொழுது நாம் முழுக்க டெக்னாலஜியை நம்பியிருக்க வேண்டிவரும் . அந்த புதிய தொழில் நுட்பத்தில் ஒன்றுதான் இந்த ட்ரோன்கள் . தற்சமயம் இந்த ட்ரோன்கள் முக்கியமான விசயத்திற்க்காக பயன்படுத்தப்படுகிறது
1) மண் மற்றும் கள ஆய்வு
நாம் பயிர் செய்யும் பயிர்களின் வளர்ச்சியை முதலில் இருந்து கண்காணிக்கலாம் . 3D வரைபடங்களைப் பெறுவதன் மூலம். மண்ணின் தரம் மற்றும் ஊட்டச்சத்தை கண்காணிக்கலாம் . இந்த தரவுகளை வைத்துக்கொண்டு அடுத்து அது என்ன பயிர் செய்யலாம் என்பதை நாம் முடிவு செய்யலாம் .
2) விதை விதைத்தல்
இது ட்ரோனில் உள்ள புதிய முறையாகும் இன்னும் நம் நாட்டிற்கு இன்னும் அதிகமாக பயன் படுத்த ஆரம்பிக்கவில்லை ஆனால் அடுத்த 10 ஆண்டுகளில் வர வாய்ப்புள்ளது . இது விதைகளை மண்ணுக்குள் சுட்டு விதைக்கும் .
3) பூச்சி கொல்லி மற்றும் உரம் தெளித்தல்
இந்தியாவில் பெருமளவு ட்ரோன்கள் இதற்காகத்தான் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது . பணம் நேரம் அணைத்து சேமிக்கப்படுகிறது. ஒரு ஆள் ஒரு நாள் முழுவதும் தெளிக்கவேண்டியதை ட்ரோன்கள் ஒரு சில மணி நேரங்களில் முடித்துவிடும் மற்ற தெளிப்புகளை விட ட்ரோன்கள் தெளிப்பின் அளவு மிக குறைவு .
4) பயிர் மேப்பிங் மற்றும் கணக்கெடுப்பு(Crop Mapping and Surveying)
ட்ரோன்களை பயன்படுத்துவதால் இருக்கும் முக்கியமான நன்மைகளில் ஓன்று . பயிர்களை சுலபமாக கண்காணிக்க முடியும் , பூச்சி மற்றும் நோய் தாக்குதல் , பயிர்களை வளர்ச்சி போன்றவற்றை கண்காணிக்கலாம் .
Comments
Post a Comment