Skip to main content

வேளாண் இயந்திரங்கள் - 1

 கரும்பில் தாய்குருத்து வெட்டும் கருவி, வாழை நாற்று நடும் கருவி, சிறுதானியங்களைச் சேமிக்கும் கலன்!



கோயம்புத்தூரில் இயங்கி வரும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், அவ்வப்போது புதிய பண்ணைக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்காக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கரும்பில் தாய் குருத்து வெட்டும் கருவி, வாழை நாற்று நடும் இயந்திரம், சிறுதானியங்களைச் சேமிக்கும் கலன், களையெடுக்கும் கருவி, காற்று உந்துவிசை அடுப்பு ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை, பயன்பாடு உள்ளிட்ட விவரங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.


1. கரும்பில் தாய்க் குருத்து வெட்டும் கருவி



தாய்க் குருத்தை வெட்ட இந்தக் கருவி பயன்படுகிறது. இதன் மூலம் சீரான, பருமனான மற்றும் அதிக எண்ணிக்கையிலான கரும்புகள் கிடைக்கும். எளிதாகத் தொழிலாளர்கள் நடந்துகொண்டே கரும்பு தாய்க் குருத்துகளை வெட்ட முடியும். நின்று கொண்டே இந்தக் கருவியை இயக்க முடியும் என்பதால் குனிந்து வேலை செய்ய வேண்டியதில்லை.


கருவியின் விலை : ரூ.1,000/-


வெட்டும் செலவு : ரூ.465 (ஹெக்டேருக்கு)


நேரம் சேமிப்பு : 44%


ஆள் செலவு சேமிப்பு : 47%


கருவியின் எடை : 1.6 கிலோ


2. களை எடுக்கும் கருவி


பிரஷ் கட்டர் என்று அழைக்கப் படும் புதர் வெட்டும் இயந்திரத்தில் மாட்டி இயக்கக்கூடியது இந்தக் கருவி. பெட்ரோல் இன்ஜினால் இயங்கக்கூடிய இந்தக் கருவியைக் கைகளாலேயே இயக்கலாம். ஒரு ஹெக்டேருக்கு ஆட்களால் செய்யக்கூடிய களை எடுக்கும் செலவில் 4,000 ரூபாயை மிச்சப் படுத்தலாம். களையெடுக்கும் நேரமும் 50 சதவிதவிகிதம் மிச்சப்படும். களை எடுக்கும் கருவி தனியாக இருப்பதால் இதை அகற்றிவிட்டு அந்தந்த வேலைக்கான கருவியை மாற்றி புதர்களை அகற்றுவது, தீவனப் புல் வெட்டுவது என மற்றப் பணி களுக்கும் பயன்படுத்தலாம்.


இயந்திரத்தின் விலை - ரூ.20,000


களை எடுக்க ஆகும் செலவு - ரூ. 5,224/ ஹெக்டேர்


களை எடுக்கும் திறன் - 79.3% to 81.2%


சேமிக்கப்படும் பணம் மற்றும் நேரம் - 44% - 52%


3. திசு வளர்ப்பு வாழை நாற்று நடும் இயந்திரம்


டிராக்டர் மூலம் இயங்கும் இந்த இயந்திரம், திசு வளர்ப்பு முறையில் உருவாக் கப்பட்ட வாழை நாற்றுகளை நடவு செய்யப் பயன்படுகிறது. 30 செ.மீ ஆழத்துக்கு மண் தளர்த்தப்பட்டு 15 - 20 செ.மீ ஆழத்தில் நாற்றை நடலாம்.


இருவரிசைகளில் 1.5 மீட்டர் இடைவெளி யில் நாற்றுகளை நடலாம். ஒரு ஹெக்டேரில் நாற்றுகளை நட ரூ.2,500 செலவாகும். இதுவே வழக்கமான முறையில் நாற்று நடவு என்றால் ஒரு நாற்றுக்கு 6 ரூபாய் வீதம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.18,500 செலவாகும்.


இயந்திரத்தின் விலை - ரூ.90,000


வேலைத்திறன்- 2.5 ஹெக்டேர்/ஒரு நாளுக்கு


சேமிக்கப்படும் நேரம் - 70%


சேமிக்கப்படும் ஆட்கள் - 90%4.


சிறுதானியங்களைச் சேமிக்கும்


காற்றுப் புகா சேமிப்புக் கலன்



இன்று தானியங்களாக விற்பதைவிட அவற்றை அரைத்து அரிசியாக விற்கும்போது கூடுதல் வருமானம் கிடைக்கிறது. அதுவும் சிறுதானியங்களை உமி நீக்கி அரிசியாக விற்கும்போது நல்ல விலை கிடைக்கிறது. சிறுதானிய அரிசி வகைகளை சேமிக்கும் வகையில் கலன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது துருப்பிடிக்காத எஃகு (எஸ்.எஸ் - 304) கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. பண்ணையில் தேவையான இடங்களுக்குச் சுலபமாக எடுத்துச் செல்லலாம். சேமிப்புக் காலத்தில் பூச்சிகள் வராமல் தடுக்க வல்லது இந்தக் கலன். இதில் 6 மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம்.


காற்றுப் புகா சேமிப்புக் கலனின் விலை - ரூ.1,75,000


கொள்ளளவு - 1,000 கிலோ


உமி நீக்கிய சிறுதானியங்களின் இருப்புக் காலம் - 180 நாள்கள்.


5. காற்று உந்துவிசை அடுப்பு


எரிபொருள் சிக்கனத்தை மேற்கொள்ள இது உதவுகிறது. அதிக எரிதிறன் (34%) கொண்டது. சாதாரண விறகு அடுப்புகளை விடச் சுமார் 62% குறைவான மாசு வெளியிடும்.


அடுப்பின் விலை - ரூ.3,500 மற்றும் ரூ.5,000 (சூரிய மின்சக்தி இணைப்புடன்)


வேலைத்திறன் - 3.2 கிலோ வாட் வெப்ப வெளியீடு


எரிபொருள் பயன்பாடு - ஒரு மணி நேரத்துக்கு 2 கிலோ


நேர சேமிப்பு - 40%


கருவிகளை வாங்குவது எப்படி?


தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால் இந்தக் கருவிகள் உற்பத்தி செய்து வழங்குபவர்களின் தொடர்பு எண்களை கொடுப்பார்கள்.


தொடர்புக்கு,


வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.


தொலைபேசி:


0422 6611255, 6611455.

Comments

ஒரு மணி கான வாடகை

*வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள கருவிகளும் அதன் ஒரு மணி கான வாடகை விபரங்களும்*:

ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340/-(டிராக்டர், உபகருவிகள் மற்றும் டீசல் உட்பட)
கீழ்க்கண்ட இயந்திரங்கள்:

1.தென்னை மட்டை தூளாக்கும் கருவி
2.விதைக்கும் கருவி
3.சோளத்தட்டை அறுவடை செய்யும் இயந்திரம்
4.செடிகள் நடும் இயந்திரம்
5.ஒன்பது கொழு கலப்பை
6.ஐந்து கொழு கலப்பை
7.வார்ப்பு இறகு கலப்பை
8.ரோட்டவேட்டர்
9.வைக்கோல் கட்டும் கருவி
10.வைக்கோல் உலர்த்தும் கருவி

பிற இயந்திரங்கள்:

1.மணல் அள்ளும் எந்திரம்/ ஜேசிபி. ரூ.660
2.திரும்பி மண் அள்ளும் இயந்திரம் உருளை பட்டை/ ஹிட்டாச்சி ரூ.1440
3.மண் தள்ளும் இயந்திரம்/புல்டோசர் ரூ.840
4.நெல் அறுவடை இயந்திரம் (சக்கரம்) ரூ. 875
5.நெல் அறுவடை
இயந்திரம்
(ரப்பர் உருளை பட்டை)
ரூ 1415

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் .

வாடகை பணத்தை அலுவலகங்களில் செலுத்தி அதற்கான ரசீதை பெற்றுக்கொள்ளலாம்.

Popular posts from this blog

இந்தியாவில் சிறந்த பவர் டில்லர்ஸ் மற்றும் பவர் டில்லருக்கான SBI வாங்கி கடன் பற்றி பார்ப்போம்

power tiller machine விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வேளைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கக்கூடியது இந்த பவர் டில்லர்களே . இவை பெருபாலும் மண்ணை நன்றாக உழ மற்றும் களை கட்டுப்படுத்த பயன்படுகிறது . இந்த பவர் டில்லர்கள் மூலம் நல்ல பொடி பொடியாவததுடன் நிலத்திற்கு நல்ல காற்றோட்டம் கிடைக்கும் . நாம் இந்த கட்டுரையில் சிறந்த பவர் டில்லர்களையும் sbi வங்கி கொடுக்கும் டில்லருக்கான கடன் வசதி பற்றியும் பார்ப்போம் . 1. KMW Mega T15 Deluxe by Kirloskar கிர்லோஸ்கர் நிறுவனத்திலிருந்து பல வகையான பயன்பாட்டிற்காக சந்தைக்கு வந்துள்ள டில்லராகும் . இந்த டில்லர் பலவகையான அம்சங்களை கொண்டது , மொபைல் சார்ஜ் ஏத்தும் வசதி மற்றும் பவர் மீட்டர் உள்ளது. 15 குதிரை திறன் சக்தி கொண்ட இவை பண்ணை மற்றும் மானாவாரி நிலங்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளது . குறைந்த fuel-லில் அதிக வேலை செய்யக்கூடியது . சிறந்த பிரேக் வசதியும் மெட்டாலிக் கிளட்ச் உடையது . இதில் உள்ள வசதிகள் தனித்துவமானது மற்ற டில்லர்களில் எதிர்பார்க்க முடியாது  2. Honda FJ500 Power Tiller ஹோண்டா நிறுவனத்தால் சந்தைப்படுத்தப்பட்ட இந்த பவர் டில்லர்  அனைத்துவிதமான  சாக

இந்தியாவில் கிடைக்கும் ஏ .சி வசதியுள்ள டிராக்டர்களை பற்றி பார்ப்போம்

Top Five Aircon Tractors sales Information  சந்தேகமே இல்லாமல் இந்தியா விவசாய நாடு , இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகிக்க கூடியது விவசாயம் . ஆகவே இந்தியாவின் விவசாய சந்தையை மையப்படுத்தி பல்வேறு  டெக்னாலஜி பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் பல்வேறு விவசாயம் சார்ந்த வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றன அவை பெருமளவு விவசாயிகளின் பணிச்சுமையை குறைத்து வருகின்றன . அதே சமயம் ஒரு சில தயாரிப்புகள் நாம் குளு குளு வேலை பார்ப்பதற்காக தயாரிக்க பட்டுள்ளன . உண்மைதான் சொகுசு கார்களில் இருப்பதுபோல் ட்ராக்டர்களிலும் குளு குளு வசதி வந்துவிட்டது ( 5 லச்ச ரூபாய்க்கு சாதாரண டிராக்டர் வாங்கவே நமக்கு வழியில்லை என்று நீங்கள் நினைப்பது புரிகிறது .) இருந்தாலும் விவசாயிகளின் வாழ்க்கை ஒரு நாள் மாறுமில்ல அப்ப வாங்குவோம் . இப்ப நாம் இந்த கட்டுரையில் ஏ .சி வசதி கொண்ட டிராக்டர்களை பற்றி பார்ப்போம் . இந்தியாவில் உள்ள முதல் 7 டிராக்டர்களை பார்ப்போம் - Click Here   விவசாய டிராக்டர் கடன் மற்றும் மானியம் - Click Here  1 ) மஹிந்திரா அர்ஜூன் நோவோ605 டிஐ-ஐ இதன் விலை 9.40 முதல் 9.80 லச்சம் வரை ஆகும் . ஏ .சி வச

களை எடுக்கும் கருவிகள் Part-1

 Weeder Tools Manual  களை நம்மால் தடுக்கவும் முடியாது அதை கட்டுப்படுத்தவும் முடியாது . களைகள் முளைப்பதை மட்டும் நம்மால் ஓரளவுக்கு தள்ளி போடமுடியும் . இயற்கை அல்லது செயற்கை களைக்கொல்லி தெளித்து கட்டுப்படுத்த முடியும் என்றாலும் அதில் நிலம் வளம் இழந்து போக வாய்ப்புள்ளது (இயற்கை களைக்கொல்லியில் வாய்ப்பு குறைவே என்றாலும் அடிக்கடி தெளித்தால் அதன் மூலமும் நிலம் வளம் குறையலாம் )  What's App Group Link - Click Here ஆகவே நீங்கள் களையை கட்டுப்படுத்த எடுக்க வேண்டியது களையெடுக்கும் கருவிகள் அதை பற்றி இந்த கட்டுரையில் பார்க்கலாம் . களை கட்டுப்பாட்டை மூன்று விதமாக பிரிக்கலாம் விவசாயப்பயிர்கள் , தோட்டக்கலை பயிர்கள் , வீட்டு அல்லது மாடித்தோட்டம் . இந்த மூன்றில் எதற்கு கீழ் நீங்கள் வருவீர்கள் என்று பார்த்து நீங்கள் களை எடுக்கும் கருவிகளை வாங்கலாம் . களை எடுக்கும் கருவிகளை இரண்டு விதமாக பிரிக்கலாம்  1) மேனுவல் வீடர்   2) பவர் வீடர்  1) மேனுவல் வீடர் A)  Hand Weeder இந்தவகை வீடர்கள் பெரும்பாலும் வீட்டுத்தோட்டம் அல்லது மாட்டித்தோட்டத்தில் உள்ள களைகளை வேருடன் எடுப்பதற்கு உதவும். உங்கள் லானில் உள